/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவியர் பாதுகாப்பு உறுதி செய்ய நா.த.க., மனு
/
மாணவியர் பாதுகாப்பு உறுதி செய்ய நா.த.க., மனு
ADDED : பிப் 14, 2025 04:08 AM

திருப்பூர்; திருப்பூர் நொய்யல் வீதி அரசு நடுநிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இச்செயலில் ஈடுபட்ட கணித ஆசிரியயர் சுந்தரவடிவேல், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த ஆசிரியரின் கல்விச்சான்றிதழை ரத்து செய்யவேண்டும். இவரை வேறு எந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் வேலை செய்ய அனுமதிக்க கூடாது என அரசு சான்று வழங்கவேண்டும்.
அனைத்து அரசு பள்ளி, கல்லுாரிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கிமாகவும் கல்வி கற்பதை உறுதி செய்ய, குழு அமைக்கவேண்டும். மாணவர்களை எப்படி அணுகவேண்டும் என ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கவேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

