/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயன்பாடற்ற கோவில் நிலம் சமூக விரோதிகளின் புகலிடம்
/
பயன்பாடற்ற கோவில் நிலம் சமூக விரோதிகளின் புகலிடம்
ADDED : டிச 25, 2024 11:23 PM

பல்லடம், ; பல்லடம் அருகே, பயன்பாடற்ற கோவில் நிலம், சமூக விரோதிகளின் புகலிடமாகி வருகிறது.
பல்லடம் அடுத்த, பெரும்பாளி பகுதியில், பொன் காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 11.65 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, விற்பனை செய்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே, இந்த நிலம் பயனற்று புதர்மண்டி கிடக்கிறது.
இந்நிலத்தில், மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடந்து. குறிப்பாக, இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்தை பயன்படுத்தி நடந்து வரும் சமூக விரோத செயல்களால், வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் போலீசார் கூடுதல் ரோந்து பணி மேற்கொண்டு, சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

