/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர்ப்புற நல வாழ்வு மையம் திறக்காமல் இழுத்தடிப்பு
/
நகர்ப்புற நல வாழ்வு மையம் திறக்காமல் இழுத்தடிப்பு
ADDED : ஏப் 28, 2025 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:  -திருப்பூர் மாநகராட்சி, 24வது வார்டு, தியாகி பழனிச்சாமி நகரில் மாநகராட்சி சார்பில், நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியினர் தொலைவிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ, தனியார் மருத்துவமனைக்கோதான் செல்ல வேண்டியுள்ளது. கர்ப்பிணிகள், முதியவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கர்ப்பிணிகள் அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகத்தைப் பெற முடிவதில்லை. உடனடியாக திறக்க நடவடிக்கை தேவை.

