sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் நாளை முதல் 14 வரை நடக்கிறது

/

கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் நாளை முதல் 14 வரை நடக்கிறது

கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் நாளை முதல் 14 வரை நடக்கிறது

கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் நாளை முதல் 14 வரை நடக்கிறது


ADDED : ஜன 30, 2025 11:00 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: கால்நடைத்துறை சார்பில், உடுமலை பகுதியிலுள்ள கிராமங்களில், நாளை முதல், 14ம் தேதி வரை கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் நடக்கிறது.

கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக, ஆண்டுதோறும் பிப்., மாதம், கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தும், இரு வார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு, நாளை (பிப்., 1ம் தேதி) முதல், 14ம் தேதி வரை, இரண்டு வாரம், கோழிகளுக்கான 'கோழிக்கழிச்சல்' நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் நடக்கிறது.

உடுமலை பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை நிலையங்களில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் வாயிலாக, இம்முகாம்களில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

எனவே, அனைத்து கோழிவளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு, கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி


கால்நடைத்துறை பொள்ளாாச்சி கோட்டத்தில், இரு வார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள கோழி வளர்ப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கோட்டத்தில் கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களில் பணியாற்றும் கால்நடை உதவி டாக்டர் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் வாயிலாக, கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

முகாமில், எட்டு வாரத்துக்கு மேற்பட்ட கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி, பயன்பெறலாம். இல்லை எனில், 'ராணிக்கெட்' வைரஸ் தாக்கி, வெள்ளை கழிச்சல் நோயால், கோழிகள் பாதிக்கப்படும். கோழி வளர்ப்போர் அனைவரும் கால்நடைத்துறை வாயிலாக நடைபெறும் இம்முகாமில் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us