ADDED : ஜன 02, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: பெங்களூரு - கோவை வந்தே பாரத் ரயில் இயக்கத்தில் மாற்றமில்லை; வழக்கம் போல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ரயில்வே, பெங்களூரு கோட்டத்துக்கு உட்பட்ட ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், பெங்களூரு - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (எண்:20641) 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஓசூர் தண்டவாள பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வரும், 4, 5 மற்றும், 6ம் தேதி அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்தில் வழக்கம் போல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயங்குமென தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

