sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மறைந்து வரும் ஏர் கலப்பை; டிராக்டருக்கு மாறிய விவசாயிகள்

/

மறைந்து வரும் ஏர் கலப்பை; டிராக்டருக்கு மாறிய விவசாயிகள்

மறைந்து வரும் ஏர் கலப்பை; டிராக்டருக்கு மாறிய விவசாயிகள்

மறைந்து வரும் ஏர் கலப்பை; டிராக்டருக்கு மாறிய விவசாயிகள்


ADDED : அக் 09, 2024 12:38 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார் : புரட்டாசி பட்டம் துவங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் மழை புரட்டாசி பட்ட சாகுபடிக்கு கை கொடுத்துள்ளது. இதனால், விவசாயிகள் உற்சாகமாக விதைப்பு பணிகளை துவக்கி உள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன் வரை, மழை பெய்தால் மாடுகளைக் கொண்டு ஏர்பூட்டி உழவு ஓட்டுவர். விவசாயிகள் ஒன்று முதல் இரண்டு ஏர் வரை வைத்திருப்பர். இதற்காக மாடுகளை உழவு ஓட்ட பழக்கி வைத்திருப்பர். மாடு மேய்ப்பதற்கென்றே ஓர் ஆளை நியமித்திருப்பர். மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் இருந்தது.

தற்போது, அந்திக காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இளைய தலைமுறை விவசாயத்திற்கு வந்த பின் மாடுகளை வைத்து உழவு ஓட்டும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது என்றே கூறலாம். சொந்த டிராக்டர் வாங்க முடியாதவர்கள் வாடகை டிராக்டரை வைத்தாவது உழவு ஓட்டும் பணியை செய்து வருகின்றனர். பொங்கல் நாளில், பூஜை செய்வதற்கு மட்டுமே ஏர் கலப்பை காட்சி பொருளாக வைக்கப்படுகிறது.

கடின உழைப்பு காலதாமதம் ஏற்பட்டாலும் மாடுகளை வைத்து உழவு ஓட்டுவது தற்சார்பு பொருளாதாரத்தை துாக்கி நிறுத்தியது. தற்பொழுது நவீன உலகில் விவசாயிகள் தற்சார்பு பொருளாதாரத்தில் இருந்து முற்றிலும் மாறி பிறரை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதனால், உரத்திற்காகவும், உழவுக்காகவும் பெரும் சுமையை உழவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்றே கூறலாம்.

பலராமர்

------------இவர், மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம். வெண்ணிறத்தில் அவதரித்த பெருமாள், ராமாவதாரத்தில், தம்பியாக இருந்த லட்சுமணனை, தனது அண்ணனாக, ஏர் கலப்பையுடன் ஏற்ற அவதாரம்.








      Dinamalar
      Follow us