/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அருள்புரம் நால் ரோட்டில் வாகனங்கள் தாறுமாறு
/
அருள்புரம் நால் ரோட்டில் வாகனங்கள் தாறுமாறு
ADDED : அக் 30, 2025 11:57 PM

பல்லடம்:  திருப்பூர் - பல்லடம் ரோடு, சேடபாளையம் - பாச்சாங்காட்டுப்பாளையம் சந்திக்கும் நால்ரோடு(அருள்புரம் நால் ரோடு) பகுதியில், அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில், விதிமுறைகளைப் பின்பற்றாமல், வாகனங்கள் தாறுமாறாக வருவதால்,  விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
நான்கு திசையில் இருந்தும், ஒரே நேரத்தில் வாகனங்கள் ரோட்டை கடக்க முயற்சிப்பதால், தேவையற்ற போக்குவரத்து நெரிசல் இப்பகுதியில் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் மாணவர்களும் இந்த ரோட்டை பயன்படுத்தும் நிலையில், போலீசார், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இப்பகுதியில் போலீசார் நியமித்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். விதிமுறை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

