sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 விபத்து அபாயத்துடன் வாகனங்கள்; வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா!

/

 விபத்து அபாயத்துடன் வாகனங்கள்; வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா!

 விபத்து அபாயத்துடன் வாகனங்கள்; வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா!

 விபத்து அபாயத்துடன் வாகனங்கள்; வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா!


ADDED : டிச 03, 2025 06:13 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: துணை ஜனாதிபதி வருகைக்காக டவுன்ஹால் அருகே அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படாத காரணத்தால், விபத்து அபாயத்துடன் வாகனங்கள் ரோட்டில் சென்று வருகிறது.

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், திருப்பூருக்கு வந்தார்.

அப்போது, ரோடுகளில் இருந்த, வேகத்தடை அகற்றப்பட்டது. டவுன்ஹால் அருகே செல்வ விநாயகர் கோவில் பின்புறம் இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால், அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளது.

அந்த ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக ரோட்டை கடந்து சென்று வருகிறது. புஷ்பாவில் இருந்து ரயில்வே ஸ்டேஷனை நோக்கியும், ஊத்துக்குளி ரோட்டில் இருந்து டவுன்ஹால் நோக்கி செல்லும் வாகனம், சம்பந்தப்பட்ட சந்திப்பு பகுதியில் வேகமாக வருகின்றன.

வேகத்தடை இல்லாத காரணமாக, அதிவேகமாக கடக்கும் வாகனத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து நிகழும் முன், மீண்டும் வேகத்தடையை அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us