sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வேலவன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

/

வேலவன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

வேலவன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

வேலவன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்


ADDED : நவ 09, 2024 07:09 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, நேற்று திருக்கல்யாண உற்சவ விழா விமரிசையாக நடந்தது.

ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து, கந்த சஷ்டிவிரதம் துவங்குகிறது. பக்தர்கள், முதல்நாளில் காப்பு அணிந்து, எவ்வித ஆகாரமும் உட்கொள்ளாமல் விரதம் மேற்கொண்டு, முருகனை வழிபடுவது வழக்கம். சூரசம்ஹாரத்தை தொடர்ந்து நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று, விருந்து உண்டு விரதம் பூர்த்தி செய்யப்படும்.

திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கடந்த, 2ம் தேதி காப்புக்கட்டி, கந்தசஷ்டி விழா துவங்கியது. தினசரி பூஜைகளை தொடர்ந்து, நேற்று முன்தினம், அன்னையிடம் வேல் வாங்கி வந்த முருகப்பெருமான், சூரனை வதம் செய்து, ஜெயந்தி நாதராக கோவிலுக்கு திரும்பினார்.

கந்தசஷ்டி விழாவின் நிறைவாக, நேற்று, திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு, 16 வகையான திரவியங்களால் மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

மணக்கோலத்தில், தேவியருடன் எழுந்தருளிய சுப்ரமணியர், திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வடை, பாயசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

சிவன்மலை சுப்ரமணியர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவில், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில், அணைக்காடு செல்வ விநாயகர் கோவில், பலவஞ்சிபாளையம் காளிக்குமாரசுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா திருக்கல்யாண உற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்தது.

விரதம் இருந்த பக்தர்கள் கங்கணம் கழற்றி, கோவில் அன்னதானத்தில் பங்கேற்று, விரதத்தை நிறைவு செய்தனர். கந்தசஷ்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு, மஞ்சள் சரடு, மலர்வகை, குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

கனககிரி வேலாயுதசுவாமி


கண்டியன்கோவில் ஊராட்சி, குளத்துப்பாளையத்தில் உள்ள கனககிரி வேலாயுதசுவாமி கோவில், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம். வலதுபுறம் தண்டாயுதம், இடதுபுறம் கிளியுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். புதிதாக சூரபத்மன் உருவங்கள் செய்து, சூரசம்ஹாரத்துடன் கந்தசஷ்டி விழா திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருமுருகன்பூண்டி


திருமுருகன் பூண்டி திருமுருக நாத சுவாமி கோவிலில் நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில், வள்ளி தெய்வானை உடனமர் சண்முகநாதர் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் அரோகரா கோஷத்தோடு சண்முகநாதரை வழிபட்டனர். பக்தர்கள் மொய்ப்பணம் எழுதுதல், பாத காணிக்கையடுத்து வெள்ளி யானை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதர் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பல்லடம்


பல்லடம் அடுத்த மாதப்பூரில் முத்துக்குமாரசாமி கோவிலில் நேற்று முன்தினம், கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு நடந்தது. மரகதாம்பிகையிடம் வெற்றிவேலை பெற்றுக் கொண்டு, மயில் வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசாமி, சூரனை வதம் செய்தார். தொடர்ந்து, நேற்று காலை, 5.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. 'அரோகரா' கோஷம் முழங்க முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேதராக கல்யாண கோலத்தில் முத்துக்குமாரசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us