sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்ட அளவில் சாதித்து காட்டிய விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பள்ளி

/

மாவட்ட அளவில் சாதித்து காட்டிய விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பள்ளி

மாவட்ட அளவில் சாதித்து காட்டிய விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பள்ளி

மாவட்ட அளவில் சாதித்து காட்டிய விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பள்ளி


ADDED : மே 18, 2025 12:47 AM

Google News

ADDED : மே 18, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : விஜயமங்கலம், பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவி, நேகா, 500க்கு, 496 மதிப்பெண்கள் பெற்று, பெருந்துறை தாலுகா அளவில், முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவி, தமிழ் - 98, ஆங்கிலம் -99, கணிதம் -99, அறிவியல் -100, சமூக அறிவியல் -100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இரண்டாமிடம் பெற்ற மாணவர் ரக்சன், 500க்கு, 495 மதிப்பெண்களும், மூன்றாமிடம் பிடித்த மாணவர்கள் பவிஷ் மற்றும் வர்ஷினி, தலா, 494 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். பள்ளியில், 490 மதிப்பெண்களுக்கு அதிகமாக, 14 மாணவர்களும், 480க்கு அதிகமாக, 48 மாணவர்களும், 450க்கு அதிகமாக, 201 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பிளஸ் 1 தேர்வில், மாணவி தனுஷியா, தமிழ் -99, ஆங்கிலம் -99, கணிதம் -100, இயற்பியல் -100, வேதியியல் -99, கணினி அறிவியல் -100, என, 600க்கு, 597 மதிப்பெண் பெற்று, ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

மாணவி தர்சினி, 600க்கு 593 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், மாணவர் கவுதம், 600க்கு 591 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவி சந்தியா, 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று, பெருந்துறை தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, பள்ளி தாளாளர் முனைவர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us