sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடுதல் பஸ்கள் இயக்க கிராம மக்கள் கோரிக்கை

/

கூடுதல் பஸ்கள் இயக்க கிராம மக்கள் கோரிக்கை

கூடுதல் பஸ்கள் இயக்க கிராம மக்கள் கோரிக்கை

கூடுதல் பஸ்கள் இயக்க கிராம மக்கள் கோரிக்கை


ADDED : டிச 03, 2024 06:19 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை - பல்லடம் வழித்தடத்தில் போதிய பஸ்கள் இல்லாததால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

உடுமலை - பல்லடம் வழித்தடத்தில், குடிமங்கலம், பெரியபட்டி, சித்தம்பலம், கேத்தனுார், மந்திரிபாளையம், குள்ளம்பாளையம், வாவிபாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரிப்புத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.

கிராமங்களில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள், தினசரி, திருப்பூர், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் உள்ளிட்ட நிறுவனங் களுக்கு வேலைக்கு செல்கின்றனர்.

இவ்வழித்தடங்களில் இயங்கும் பெரும்பாலான அரசு - தனியார் பஸ்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் நிரம்பி செல்கின்றன.

பொதுமக்கள் கூறுகையில், 'காலை மற்றும் மாலை நேரங்களில், பெரும்பாலான பஸ்கள் கிராமங்களில் நிற்காமல் செல்கின்றன. வேலைக்குச் செல்பவர்கள், மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். இவ்வழித்தடத்தில், கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us