sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

72 கடை, நிறுவனங்களில் விதிமீறல்

/

72 கடை, நிறுவனங்களில் விதிமீறல்

72 கடை, நிறுவனங்களில் விதிமீறல்

72 கடை, நிறுவனங்களில் விதிமீறல்


ADDED : அக் 02, 2025 11:25 PM

Google News

ADDED : அக் 02, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில், 84 நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறையினர் நடத்திய ஆய்வில், 72 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

திருப்பூர், தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி தலைமையில், தொழிலாளர் துணை மற்றும் உதவி கமிஷனர்கள், திருப்பூர் நகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக மற்றும் உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில், தேசிய பண்டிகை விடுமுறை நாளான நேற்று (காந்தி ஜெயந்தி) ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 35 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், 25 கடை, நிறுவனங்களில் முரண்பாடுகள் தெரிய வந்துள்ளது. 49 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்த போது, 47 நிறுவனங்களில் விதிமீறல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 'மொத்தம், 84 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 72 நிறுவனங்களில் முரண்பாடுகள் உறுதி செய்யப்பட்டது; அந்நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, தொழிலாளர் நலத்துறை யினர் தெரிவித்தனர்.

விதிமீறல் என்ன? தேசிய பண்டிகை விடுமுறை தினத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது, சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.

இதுதொடர்பான விவரங்களை, தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு, 24 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு, தகவல் தெரிவிக்காமல் பணியமர்த்தியிருந்தால், அந்நிறுவனத்தினர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.






      Dinamalar
      Follow us