
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், பி.என்., ரோட்டிலுள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில், இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.
முகாமில், 143 பேருக்கு, கண் பரிசேதனை செய்யப்பட்டது. கண் பாதிப்புகள் கண்டறியப்பட்ட 31 பேர், அறுவை சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். 84 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.