/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு துவக்கப்பள்ளியில் விவேகானந்தர் நினைவு நாள்
/
அரசு துவக்கப்பள்ளியில் விவேகானந்தர் நினைவு நாள்
ADDED : ஜூலை 06, 2025 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், விவேகானந்தர் நினைவு நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
விவேகானந்தர் நினைவு நாளையொட்டி, இப்பள்ளியில் மாணவர்களுக்கு அவரின் வாழ்க்கை குறித்து படம் திரையிடப்பட்டது.
தொடர்ந்து அவரின் பொன்மொழிகள் குறித்து தலைமையாசிரியர் தங்கவேல் விளக்கமளித்தார். விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.