/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல்
/
மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல்
ADDED : ஏப் 03, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கோடைக்காலத்தையொட்டி திருப்பூர் மாநகராட்சி சார்பில், நீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி எதிரில் நடந்தது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். கமிஷனர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
துணை மேயர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், மக்கள் பயன்பெறும் வகையில், நான்கு மண்டல அலுவலகங்கள் அருகேயும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளன.

