sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சவுக்கு மரக்காடாக மாறப்போகும் தண்ணீர் பந்தல் வலசு கிராமம்

/

சவுக்கு மரக்காடாக மாறப்போகும் தண்ணீர் பந்தல் வலசு கிராமம்

சவுக்கு மரக்காடாக மாறப்போகும் தண்ணீர் பந்தல் வலசு கிராமம்

சவுக்கு மரக்காடாக மாறப்போகும் தண்ணீர் பந்தல் வலசு கிராமம்


ADDED : ஜூலை 05, 2025 11:57 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் பசுமை பரப்பை விரிவாக்கியுள்ள பெருமை, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவையே சாரும். பல்வேறு பசுமை அமைப்பினர் கரம் கோர்த்து, ஆண்டுதோறும் மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

கடந்த, 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன் பசுமை பயணம் மீண்டும் வேகமெடுத்துள்ளது. வழக்கம் போல், உடுமலை, வெள்ளகோவில் சுற்றுப்பகுதி விவசாயிகள், மரக்கன்று நட்டு வளர்க்க மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.

வெள்ளகோவிலை அடுத்த தண்ணீர் பந்தல் வலசு கிராமத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்-11' திட்டத்தில், 8,400 மரக்கன்றுகள் நடப்பட்டன. நில உரிமையாளர் ஜெகநாதன் குடும்பத்தினர் மற்றும் திட்ட பணிக்குழுவினர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.

ஒரே இடத்தில், 8,400 சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதால், அடுத்த சில ஆண்டுகளில், பெரிய சவுக்கு மரக்காடு போல் வளர்ந்து, தண்ணீர்பந்தல் வலசுவில் பசுமையை கூட்டும் என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us