sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வட்டமலைக்கரை அணைக்கு இன்று தண்ணீர் திறப்பு

/

வட்டமலைக்கரை அணைக்கு இன்று தண்ணீர் திறப்பு

வட்டமலைக்கரை அணைக்கு இன்று தண்ணீர் திறப்பு

வட்டமலைக்கரை அணைக்கு இன்று தண்ணீர் திறப்பு


ADDED : ஜன 07, 2025 11:58 PM

Google News

ADDED : ஜன 07, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை ஓடை அணை, 1978ம் ஆண்டு கட்டப்பட்டது; கால்வாய் வழியாக, 6,000 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது.

அணைக்கு, கள்ளிப்பாளையம் பி.ஏ.பி., கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. போதிய நீர்வரத்து இல்லாததால், பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது.

வட்டமலைக்கரை ஆண்டுக்கு மூன்று முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பி.ஏ.பி., கிளை வாய்க்காலில் இருந்து, வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும்; அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் நிரந்தரமான திட்டத்தையும் உருவாக்கே வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வட்டமலைக்கரை ஓடை அணை விவசாயிகள், அணைக்கு நிரந்தரமான தண்ணீர் வசதியை ஏற்படுத்தக்கோரி, கடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், தனித்தனியே மனு வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, வட்டமலை அணைக்கு தண்ணீர் திறக்க, நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருமூர்த்தி அணையில் இருந்து, பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம், 89.900 கி.மீ., தொலைவில் உள்ள கள்ளிப்பாளையம் நீர் வெளிப்போக்கி வழியாக, காங்கயம் தாலுகா, உத்தமபாளையம் கிராமத்தில் உள்ள, வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறக்கப்படும்.

வரும் 8ம் தேதி (இன்று) முதல், 18ம் தேதி வரை, 10 நாட்களில், 240 மில்லியன் கன அடிக்கும் மிகாமல், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும்,' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us