/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ADDED : ஏப் 23, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ; வஞ்சிபாளையம் பகுதியில் ரயில்வே பாதையில் உயர் மட்ட மேம்பாலம் உள்ளது. இப்பாலத்தின் கீழ், குடிநீர் சப்ளை செய்யும் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இரு நாள் முன், அப்பகுதியில் குழி தோண்டும் பணி நடந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள குடிநீர் வினியோக குழாய் சேதமானது. இதிலிருந்து குடிநீர் வெளியேறிய வண்ணம் உள்ளது. இதனால், ரோட்டில் குடிநீர் வீணாகிறது. தகவல் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

