sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருமண விழா கொண்டாட்டம் 500 மரக்கன்றுகள் வளர்க்க நிதி

/

திருமண விழா கொண்டாட்டம் 500 மரக்கன்றுகள் வளர்க்க நிதி

திருமண விழா கொண்டாட்டம் 500 மரக்கன்றுகள் வளர்க்க நிதி

திருமண விழா கொண்டாட்டம் 500 மரக்கன்றுகள் வளர்க்க நிதி


ADDED : பிப் 10, 2025 07:07 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : 'நபார்டு' வங்கி அதிகாரி, தனது மகள் திருமண விழாவை கொண்டாடும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 500 மரக்கன்றுகள் நட்டு வளர்க்க நிதி அளித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள 'நபார்டு' வங்கி பொதுமேலாளர் பிருந்தா; இவர், நீண்ட நாட்களாக, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட ஆர்வலராக இருந்து வருகிறார். அவரது மகள் ஸ்ரீநிதிக்கும், புருேஷாத்தம் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

திருமண விழாவை பசுமை விழாவாக கொண்டாடும் எண்ணத்துடன், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 500 மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, 50 ஆயிரம் ரூபாய் நிதியை பிருந்தா வழங்கியுள்ளார்.

பசுமை ஆர்வலர்கள், தங்கள் இல்ல விழா கொண்டாட்டத்தின் போது, மரக்கன்று நட்டு வளர்க்க பங்களிப்பை வழங்குவதும், பசுமை கொண்டாட்டமாக இருக்கும். பல்வகை நல உதவி வழங்குவது போல், பசுமை வளர்ப்புக்கு நிதி வழங்குவதை வரவேற்பதாக, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us