நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 பேருக்கு 21,517 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வினாடி - வினா போட்டியில் வெற்றிபெற்ற அரசு அலுவலர்கள் ஒன்பது பேர் மற்றும் ஆசிரியர்களுக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கினார்.