sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறப்பு வணிக வளாகம் என்னாச்சு? விவசாயிகள் அதிருப்தி

/

சிறப்பு வணிக வளாகம் என்னாச்சு? விவசாயிகள் அதிருப்தி

சிறப்பு வணிக வளாகம் என்னாச்சு? விவசாயிகள் அதிருப்தி

சிறப்பு வணிக வளாகம் என்னாச்சு? விவசாயிகள் அதிருப்தி


ADDED : ஜூலை 16, 2025 09:30 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 09:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ; பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், தேங்காய் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும் என்ற அரசு அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மண் வளம் மற்றும் பாசன திட்டங்களின் அடிப்படையில், மாவட்ட வாரியாக சில வேளாண் சாகுபடிகள் அதிக ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, பிரதானமாக சாகுபடி செய்யப்படும், விளைபொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகள் சில பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

எனவே, இடைத்தரகர்கள் இல்லாமல், மாவட்ட வாரியாக சிறப்பு வேளாண் வளாகங்களை துவக்க தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. அதன்படி, 'வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித்துறையின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், சிறப்பு வேளாண் வளாகங்கள் செயல்படும்.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டியில், தேங்காய் சார்ந்த வர்த்தகத்துக்காக சிறப்பு வேளாண் வளாகம் துவக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சிறப்பு வேளாண் வளாகத்துக்கான எவ்வித பணிகளும், பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டு ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அவ்வட்டார விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us