sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நட்ட இடமெல்லாம் நறுமணம் வீசும்

/

நட்ட இடமெல்லாம் நறுமணம் வீசும்

நட்ட இடமெல்லாம் நறுமணம் வீசும்

நட்ட இடமெல்லாம் நறுமணம் வீசும்


ADDED : ஜூன் 27, 2025 11:50 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் நேற்று, கூனம்பட்டி அருகே, 2,200 தைல (யூகலிப்டஸ்) மரக்கன்று நடும் பணி துவங்கியது.

'வனத்துக்குக்குள் திருப்பூர் -11' திட்டம் கடந்த வாரம் துவங்கியது; மாவட்டம் முழுவதும், தயார்நிலையில் இருந்த விவசாய நிலங்களில், மரக்கன்று நடவுப்பணி வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, பருவமழையை பயன்படுத்தி மரக்கன்று நடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஊத்துக்குளி தாலுகா, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டிபுதுாரில், தண்டபாணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று மரக்கன்று நடவு பணி துவங்கியது. சொட்டுநீர் பாசன கட்டமைப்புடன், மரக்கன்று நட்டு வளர்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

திட்டக்குழுவினரும், நில உரிமையாளர் குடும்பத்தினரும் நேற்று, மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர்.

அவரது நிலத்தில், 2,200 'யூகலிப்டஸ்' எனப்படும் தைல மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியுள்ளது.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us