sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வாக்காளர்கள் குறைந்தது ஏன்?அன்றே சுட்டிக்காட்டிய 'தினமலர்'

/

 வாக்காளர்கள் குறைந்தது ஏன்?அன்றே சுட்டிக்காட்டிய 'தினமலர்'

 வாக்காளர்கள் குறைந்தது ஏன்?அன்றே சுட்டிக்காட்டிய 'தினமலர்'

 வாக்காளர்கள் குறைந்தது ஏன்?அன்றே சுட்டிக்காட்டிய 'தினமலர்'


UPDATED : டிச 20, 2025 01:15 PM

ADDED : டிச 20, 2025 09:10 AM

Google News

UPDATED : டிச 20, 2025 01:15 PM ADDED : டிச 20, 2025 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் சட்டமன்ற தொகுதிகளை பொறுத்தவரை, தொழி லாளர்கள் நிறைந்த திருப்பூர் வடக்கு, தெற்கில் வாக்காளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. 'இத்தகைய சூழல் வரும்' என, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது.

திருப்பூரை பொறுத்தவரை வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்குவதில் பெரும் சிரமத்தை பி.எல்.ஓ.,க்கள் எதிர்கொண்டனர். உதாரணமாக, ஒரு பாகத்தில், 1,200 வாக்காளர்கள் வசிப்பதாக பட்டியலில் இருந்தால், அங்கு சென்று பார்க்கும் போது, 500 பேர் வரை தான் அடையாளம் காண முடிந்ததாக அவர்கள் கூறினர். மற்றவர்கள், வேறு வேறு இடங்களுக்கோ, ஊர்களுக்கோ சென்றிருப்பதும், அவர்களை தேடி கண்டுபிடிப்பதும், சிரமமான காரியமாக இருக்கிறது என்ற பி.எல்.ஓ.,க்களின் மனக்குமுறலை 'தினமலர்' நாளிதழ் சுட்டிக் காட்டியிருந்தது.Image 1510683இதனால், வாக்காளர் பட்டியலில் நீக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என, கணிக்கப்பட்டது. அதே போன்று, இந்த இரு தொகுதிகளில் மட்டும், 2 லட்சம் ஓட்டுகள் வரை விடுபட்டுள்ளது.Image 1510716திருப்பூர் வடக்கு, தெற்கு உட்பட, மாவட்டத்தில் கணக்கெடுப்பு படிவங்கள் அதிகளவில் வரப்பெறாமல் இருந்ததால், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் ஒவ்வொருவரும், 5 அலுவலர்களை இணைத்து, எவ்வித விடுபாடுமின்றி, படிவங்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், பெருமளவு வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us