ADDED : நவ 03, 2025 01:44 AM

திருப்பூர்:  திருப்பூர் அருகே  மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார், ஈட்டிவீரம்பாளையம், ராக்கியாபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 35; டிரைவர். இவரது மனைவி அஜிதா, 30; பனியன் தொழிலாளி. எட்டு வயதில் மகள், இரண்டு வயதில் மகன் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. தம்பதி பிரிந்து வாழ்ந்தனர். தீபாவளியின் போது, சமாதானம் செய்து, தம்பதி மீண்டும் சேர்ந்தனர்.
நேற்று நீண்ட நேரமாக அஜிதா, வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தார். அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்து போது, இறந்து கிடந்தார். பெருமாநல்லுார் போலீசார் விசாரித்தனர்.  கணவரும், இரு குழந்தைகளும் வீட்டில் இல்லை என்பதும், அஜிதாவை கழுத்து நெரித்து கொன்று கணவர் தப்பியதும் தெரியவந்தது.  கணவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'நடத்தை மீதான சந்தேகத் தில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவர் கொலை செய்துள்ளார்'' என்றனர் .

