sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பூச்சித்தாக்குதல் அதிகரிப்பு; முருங்கை விளைச்சல் பாதிக்கும்?

/

 பூச்சித்தாக்குதல் அதிகரிப்பு; முருங்கை விளைச்சல் பாதிக்கும்?

 பூச்சித்தாக்குதல் அதிகரிப்பு; முருங்கை விளைச்சல் பாதிக்கும்?

 பூச்சித்தாக்குதல் அதிகரிப்பு; முருங்கை விளைச்சல் பாதிக்கும்?


ADDED : டிச 27, 2025 06:36 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: முருங்கை ஒரு வெப்பமண்டல பயிர். திருப்பூர் மாவட்டம் பெரும்பகுதி மழை மறைவு பிரதேசமாக இருப்பதால் இப்பகுதியில் முருங்கை நன்கு விளைகிறது.

விவசாயிகள் இதை தனி பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்கின்றனர். இது சீசன் முடிவுறும் காலம். இதனால் முருங்கை வரத்து குறைந்துள்ளது. கிலோ, 100 முதல்,160 ரூபாய் வரை விலை போகிறது.

தற்பொழுது பருவமழை காலம் முடியும் தருவாயில் உள்ளது. குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவுவதால் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரித்து உள்ளது.

தற்போது முருங்கை பூக்கும் தருணம் ஆகும். இந்த சமயத்தில் பூச்சி தாக்குதல் பெருமளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக உயர் விளைச்சல் ரகங்களை இது அதிக அளவில் தாக்கி வருகிறது. இதனால் மரங்களில் இலைகள் முற்றிலுமாக உதிர்ந்து வறண்ட மரங்களைப் போல் காட்சி அளிக்கிறது.

மாசி, பங்குனி மாதங்கள் முருங்கை சீசன் காலம் ஆகும். நோய் பாதித்த மரங்களில் விளைச்சல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us