sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நஞ்சராயன் குளத்துக்கு பறவை எண்ணிக்கை அதிகரிக்குமா?

/

நஞ்சராயன் குளத்துக்கு பறவை எண்ணிக்கை அதிகரிக்குமா?

நஞ்சராயன் குளத்துக்கு பறவை எண்ணிக்கை அதிகரிக்குமா?

நஞ்சராயன் குளத்துக்கு பறவை எண்ணிக்கை அதிகரிக்குமா?


ADDED : ஆக 01, 2025 10:29 PM

Google News

ADDED : ஆக 01, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தரைதட்டியிருந்தது நஞ்சராயன் பறவைகள் சரணாலய குளம்; தற்போது, அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. இது, சரணலாயத்தில் தஞ்சமடையும் பறவைகளுக்கு சாதகமா, பாதகமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சரணாலயத்தில், 190 உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவை இனங்கள் வந்து செல்கின்றன என்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அக்., துவங்கி டிச., மாதம் வரை ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும், பல வகை பறவைகள் விருந்தாளிகளாக வந்து செல்லும். பல்லுயிர் சூழல் பாதுகாப்புக்கு பேருதவி புரியும் இந்த பறவைகளின் இடம் பெயர்வு என்பது, ஆண்டுக்காண்டு அதிகரிக்க வேண்டும் என்பது தான், இயற்கை ஆர்வலர்களின் பேராவலும், எதிர்பார்ப்பும்.நஞ்சராயன் குளம், தற்போது அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீரால் நிரம்பியிருக்கிறது; 'நிரம்பும் நீர், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும்' என்ற பொதுவான நன்மை. அதையும் தாண்டி 'நீரை திறந்துவிடப்படும் பட்சத்தில், விவசாய நிலங்களுக்கு பயன் தரும்' என்பதுதான், இத்திட்டத்தின் நோக்கம்.

பிற அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டைகளில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை, நஞ்சராயன் குளத்துக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது.

திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறுகையில்,'' கடந்த, 2005 முதல், நஞ்சராயன் குளத்தில் பறவை நோக்கலில் ஈடுபட்டு வருகிறோம். குளத்தில் நீர் நிரம்புவதும், பறவைகள் வாழும் சூழலுக்கு ஏற்ப கணிசமான அளவில் நீர் வெளியேறுவதும் பல ஆண்டுகளாக, இயற்கையாகவே நடந்துக் கொண்டிருந்தது. குளத்தில் மதகு அமைத்து நீரை தேக்கி செயற்கையாக வெளியேற்றும் போதும், பறவைகள் சூழலுக்கேற்ற நீர் மேலாண்மையை மேற்கொள்வது அவசியம்; அப்போது தான் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்,'' என்றார்.--

நீர் நிரம்பி காட்சி தரும், நஞ்சராயன் குளம்.

மண் திட்டுகள் மூழ்கினால் பறவை வாழ்விடம் பாதிக்கும் பறவைகள் வசிக்கும் மற்றும் வலசை வரும் நஞ்சராயன் குளத்தில், நீர் முழுக்க நிரம்பி ததும்புவது, நீரில் நீந்திச் சென்று இரை தேடும் நீர் காகம், கூழைக்கிடா உள்ளிட்ட ஒரு சில பறவைகளுக்கு மட்டும் தான் பலன் தரும். மாறாக, நீரில் நடந்துச் சென்று இரை தேடும் வண்ண நாரை, கரண்டி வாயன், அருவா மூக்கன், நெடுங்கால் உள்ளான் உள்ளிட்ட பறவைகளின் கால்கள் நீளமாக இருக்கும் என்பதால், அவற்றின் கணுக்கால் வரை நீர் நிரம்பியிருக்கும் போது, அவை நீரில் நடந்து சென்று, தங்களுக்கான இரையை தேடும்.இது ஒருபுறமிருக்க, வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள், பகல் நேரம் முழுக்க வெளியிடங்களுக்கு சென்று இரை தேடும்; மதிய நேரத்துக்கு மேல், குளத்தில் ஆங்காங்கே உள்ள மண் திட்டுகளில் அமர்ந்து இளைப்பாறும். குளத்தில் உள்ள மண் திட்டுகள் நீரில் மூழ்கும் போது, வலசை வரும் வெளிநாட்டு பறவைகளுக்கான வாழ்விடம் பாதிக்கப்படும். - இயற்கை ஆர்வலர்கள்.



பறவைகளின்றி மனிதர் வாழ முடியாது மனிதரின்றி பறவைகள் வாழ்ந்துவிடும் திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு 2 திட்ட மாணவர்கள், நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அழைத்து செல்லப்பட்டு, பறவை நோக்கலில் ஈடுபட்டனர். திருப்பூர் ரேஞ்சர் நித்யா தலைமை வகித்தார். வனவர் பிரேமா, மாணவர்கள் மத்தியில் பேசுகையில்,''ஒவ்வொரு பருவகால மாற்றத்தின் போதும், உள்மாநில மற்றும் வெளிநாட்டு பறவைகள், இனப் பெருக்கத்துக்காக வலசை வந்து செல்லும். எங்கோ பறந்து, திரிந்து, அலைந்து, இலை, தழை, காய், கனி ஆகியவற்றை உணவாக்கி கொள்ளும் பறவைகள் இடும் எச்சம் தான், மண்ணில் விழுந்து, மக்கி, அதிலிருந்து விதைகள் முளைக்கும். அவை மரம், செடி, கொடிகளாக மாறி, அந்த இடம் சோலை மற்றும் வனம் என்ற அடையாளத்தை பெறுகிறது. பல்லுயிர் பெருக்கம் மற்றும் இயற்கையை பேணி காப்பதில் பறவைகளின் பங்களிப்பு முக்கியம். பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது; ஆனால், மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழ்ந்து விடும்,'' என்றார். --- நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பறவை நோக்கலில் ஈடுபடும், சிக்கண்ணா கல்லுாரி மாணவிகள்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us