sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவை - சென்னை 'வந்தே பாரத்' ரயிலில் பெட்டிகள் அதிகரிக்கப்படுமா?

/

கோவை - சென்னை 'வந்தே பாரத்' ரயிலில் பெட்டிகள் அதிகரிக்கப்படுமா?

கோவை - சென்னை 'வந்தே பாரத்' ரயிலில் பெட்டிகள் அதிகரிக்கப்படுமா?

கோவை - சென்னை 'வந்தே பாரத்' ரயிலில் பெட்டிகள் அதிகரிக்கப்படுமா?


ADDED : அக் 14, 2025 02:05 AM

Google News

ADDED : அக் 14, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கம், 2023 ஏப்ரல், 9ல் துவங்கியது. வாரத்தில் புதன்கிழமை தவிர, ஆறு நாட்கள் ரயில் இயக்கப்படுகிறது. காலை, 6:00 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், 11:50க்கு சென்னை சென்றடையும். பின், மதியம் 2:15க்கு சென்னையில் புறப்பட்டு, இரவு 8:15க்கு கோவை வந்தடைகிறது.

ரயிலில் மொத்தம், 598 இடங்கள் உள்ளன. கோவை - சென்னை, எக்ஸிகியூட்டிவ் கட்டணம் பயணி ஒருவருக்கு, 2,310 ரூபாய், ஏசி சேர் கார் கட்டணம், 1,215 ரூபாயாக உள்ளது. ரயில், சேலம் - சென்னை இடையே எந்த ஸ்டேஷனிலும் நிற்பதில்லை.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருவதால், எட்டு பெட்டிகளுடன் இயங்கி வரும் வந்தே பாரத் ரயிலை, 16 பெட்டிகள் கொண்டதாக மாற்ற வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் டிக்கெட் முன்பதிவு, வருவாய், பயணியர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. கோவை - சென்னை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது; விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிடும்' என்றனர்.






      Dinamalar
      Follow us