sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'காற்றின் வேகம் பலம்'; வானிலை மையம் அறிவிப்பு

/

'காற்றின் வேகம் பலம்'; வானிலை மையம் அறிவிப்பு

'காற்றின் வேகம் பலம்'; வானிலை மையம் அறிவிப்பு

'காற்றின் வேகம் பலம்'; வானிலை மையம் அறிவிப்பு


ADDED : ஜூலை 08, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வானிலை ஆய்வு மையம் மற்றும் கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூர் மாவட்டத்துக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

வரும், 13ம் தேதி வரை, திருப்பூரில், லேசான மழை துாரல் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 34 முதல், 36 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்சம், 24 முதல், 26 டிகிரி செல்சியஸ் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 70 சதவீதம், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 30 சதவீதம் பதிவாக வாய்ப்புள்ளது.

சராசரியாக, காற்று மணிக்கு, 26 முதல், 28 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.விவசாய நிலங்களில் உரமிடுதல், மருந்து தெளித்தல் போன்ற பயிர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். காற்று வேகமாக இருக்கும் என்பதால் மருந்து துளிகள், பிற பயிர்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம், காற்று இல்லாத சமயங்களில் மருந்து தெளிக்க வேண்டும்.

சுழற்காற்று வீசும் வாய்ப்புள்ளதால், 5 மாதங்களுக்கு மேல் உள்ள கரும்பிற்கு, தோகை உரித்து, விட்டம் கொடுக்க வேண்டும்; முட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us