sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாலத்தில் பதம் பார்க்கும் கம்பிகள்: மாநில நெடுஞ்சாலையில் அவலம்

/

பாலத்தில் பதம் பார்க்கும் கம்பிகள்: மாநில நெடுஞ்சாலையில் அவலம்

பாலத்தில் பதம் பார்க்கும் கம்பிகள்: மாநில நெடுஞ்சாலையில் அவலம்

பாலத்தில் பதம் பார்க்கும் கம்பிகள்: மாநில நெடுஞ்சாலையில் அவலம்

1


ADDED : டிச 06, 2024 11:03 PM

Google News

ADDED : டிச 06, 2024 11:03 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உயர் மட்ட பாலத்தின் ஓடுதளம் பராமரிப்பு இல்லாமல் பல்லாங்குழியாக மாறியுள்ளதால், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், பெதப்பம்பட்டி அருகே உப்பாறு ஓடை குறுக்கிடுகிறது. இந்த ஓடையில் இருந்த தரைமட்ட பாலம் அகற்றப்பட்டு, கடந்த, 2019ல் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

இந்த மாநில நெடுஞ்சாலையில், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.

இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாமல், உயர் மட்ட பாலத்தின் ஓடுதளம், குண்டும், குழியுமாக மாறி விட்டது. சில இடங்களில், குழி அதிகரித்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இரவு நேரங்களில், பாலத்தின் வழியாக செல்லும், இருசக்கர வாகனங்களின் டயர்களை கான்கிரீட் கம்பிகள் பதம் பார்க்கிறது. குழிகளை பார்த்து, வாகனங்களை மெதுவாக இயக்கும் போது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகிறது. மழைக்கு பிறகு, பாலத்தின் ஓடுதளம் முற்றிலுமாக சேதடைந்து காணப்படுகிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட 'பேட்ஜ் ஓர்க்' பணிகளும் பலனில்லாமல், குழிகள் அதிகரித்து வருகிறது.

நடைபாதையும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. கனரக போக்குவரத்து அதிகமுள்ளதால், பாலத்தை அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை உடுமலைஉட்கோட்டத்தினர், பாலத்தின் ஓடுதளத்தை முழுமையாக புதுப்பித்து, விபத்துகளை தவிர்க்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us