sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பனியன் நிறுவனத்தில் வேலை; 5 குழந்தை தொழிலாளர் மீட்பு

/

பனியன் நிறுவனத்தில் வேலை; 5 குழந்தை தொழிலாளர் மீட்பு

பனியன் நிறுவனத்தில் வேலை; 5 குழந்தை தொழிலாளர் மீட்பு

பனியன் நிறுவனத்தில் வேலை; 5 குழந்தை தொழிலாளர் மீட்பு


ADDED : ஜன 19, 2025 12:32 AM

Google News

ADDED : ஜன 19, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : பீகாரைச் சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.

திருப்பூர், லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனியில் ஒரு வீட்டில், சிறிய அளவிலான, ஜிப் உற்பத்தி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. பீகாரைச் சேர்ந்த ஒருவர் இதனை நடத்தி வருகிறார். இங்கு தொழிலாளர்கள், 6 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வேலை செய்வதாகவும், இரவு பகலாக அவர்களை கடுமையாக வேலைவாங்குவதாகவும், குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரியாஸ் அகமது மற்றும் அலுவலர்கள் அங்கு நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பீகாரைச் சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 5 பேர் வேலை செய்வது தெரிந்தது. அவர்களை மீட்ட அலுவலர்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். மேலும் நிறுவனத்தில் இருந்த கலீம், 39 என்பவரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us