/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் நிறுவனத்தில் வேலை; 5 குழந்தை தொழிலாளர் மீட்பு
/
பனியன் நிறுவனத்தில் வேலை; 5 குழந்தை தொழிலாளர் மீட்பு
பனியன் நிறுவனத்தில் வேலை; 5 குழந்தை தொழிலாளர் மீட்பு
பனியன் நிறுவனத்தில் வேலை; 5 குழந்தை தொழிலாளர் மீட்பு
ADDED : ஜன 19, 2025 12:32 AM
திருப்பூர் : பீகாரைச் சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.
திருப்பூர், லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனியில் ஒரு வீட்டில், சிறிய அளவிலான, ஜிப் உற்பத்தி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. பீகாரைச் சேர்ந்த ஒருவர் இதனை நடத்தி வருகிறார். இங்கு தொழிலாளர்கள், 6 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வேலை செய்வதாகவும், இரவு பகலாக அவர்களை கடுமையாக வேலைவாங்குவதாகவும், குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரியாஸ் அகமது மற்றும் அலுவலர்கள் அங்கு நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பீகாரைச் சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 5 பேர் வேலை செய்வது தெரிந்தது. அவர்களை மீட்ட அலுவலர்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். மேலும் நிறுவனத்தில் இருந்த கலீம், 39 என்பவரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

