sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேர்தல் படிவம் அனுப்பும் பணி தீவிரம்

/

தேர்தல் படிவம் அனுப்பும் பணி தீவிரம்

தேர்தல் படிவம் அனுப்பும் பணி தீவிரம்

தேர்தல் படிவம் அனுப்பும் பணி தீவிரம்


ADDED : மார் 19, 2024 12:47 AM

Google News

ADDED : மார் 19, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் படிவங்கள் திருப்பூருக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,520 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வரும் ஏப்., 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்கள், படிப்படியாக திருப்பூருக்கு வந்துகொண்டிருக்கின்றன.

கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உள்ள பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில், தேர்தல் பொருட்கள், அரசு அலுவலர்களால் தொகுதி பிரித்து, அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

வேட்பாளர்களின் முகவர்கள் நியமனக்கடிதம், அடையாள அட்டைக்கான படிவம், ஓட்டுப்பதிவு துவங்குவதற்கான படிவம், வாக்காளர் உறுதி மொழி படிவம், தேர்தல் நிறைவடைந்ததற்கான படிவம் உள்பட ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தும் பல்வேறு படிவங்கள், தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்திலிருந்து நேற்றுமுன்தினம் அனுப்பிவைக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை தொகுதிகளுக்கான படிவங்களை, அந்தந்த தாலுகா அலுவலர்கள், வாகனங்களில் வந்து, எடுத்துச்சென்று, தேர்தல் பிரிவில் வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us