/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு
/
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு
ADDED : ஆக 28, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை, தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
உடுமலை அருகே பெரிய கோட்டையில் உள்ள விளைநிலத்தில், 50 அடி கிணறு உள்ளது. விளைநிலத்தில் வேலைக்கு வந்த பெருமாள் புதூர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி, 41 தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார் .
இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடுமலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தொழிலாளியை பாதுகாப்பாக மீட்டனர்.
பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.