/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்கப்பூண்டு விதை மானியத்தில் வாங்கலாம்
/
தக்கப்பூண்டு விதை மானியத்தில் வாங்கலாம்
ADDED : ஆக 07, 2025 07:48 PM
உடுமலை:
முதல்வரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர விதைகள் வினியோகம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. வேளாண்துறை சார்பில், பசுந்தாள் உரங்களில் ஒன்றான தக்கப்பூண்டு விதை மானிய விலையில் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், தக்கப்பூண்டு விதை, 50 சதவீத மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 'விதைகள் தேவைப்படும் விவசாயிகள், வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்' என, வேளாண்துறை தெரிவித்துள்ளது.

