ADDED : ஏப் 07, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் வெற்றிவேல் நகரில் வசித்தவர் ராஜூ, 28; திருவண்ணாமலையை சேர்ந்தவர். கட்டட வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.
ஹாலோபிளாக் சுவர் வைத்து, தகர ஷீட் வேய்ந்த அறையில் தங்கியிருந்தார். நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்த போது, தகர ஷீட் கழன்று விட்டது. அறையில் துாங்கி கொண்டிருந்த ராஜூ மீது, ஹாலோபிளாக் சுவர் சரிந்துவிழுந்து, அதே இடத்தில் பலியானார்.

