/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
வி.ஏ.ஓ., மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றவருக்கு வலை
/
வி.ஏ.ஓ., மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றவருக்கு வலை
வி.ஏ.ஓ., மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றவருக்கு வலை
வி.ஏ.ஓ., மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றவருக்கு வலை
ADDED : ஜூலை 12, 2011 12:00 AM
திருவண்ணாமலை: செய்யாறு ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில், வி.ஏ.ஓ., தனசேகரன்
மற்றும் வருவாய்துறையினர் இளநீர்குன்றம் பகுதியில், கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டனர். அப்போது, டிராக்டரில் சிவமூர்த்தி என்பவர் அனுமதியின்றி மணல்
ஏற்றி வந்தது தெரிந்தது. டிராக்டரை அனக்காவூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து
வரும்படி தனசேகரன் தெரிவித்தார். சிவமூர்த்தி மற்றும் டிராக்டர் டிரைவர்
ஆகியோர் அதே இடத்தில் மணலை கொட்டிவிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு வர முடியாது
என, தெரிவித்த அவர்கள் தனசேகரன் மீது மோதுவது போல் டிராக்டரை
இயக்கியுள்ளனர். அதில், நிலை தடுமாறிய தனசேகரன் பள்ளத்தில் விழுந்து
காயமடைந்தார்.
அனக்காவூர் போலீஸார் விசாரித்து, தலைமறைவான சிவமூர்த்தி மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.