sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மாசி மக தீர்த்தவாரியில் தந்தைக்குதிதி கொடுத்த அருணாசலேஸ்வ

/

மாசி மக தீர்த்தவாரியில் தந்தைக்குதிதி கொடுத்த அருணாசலேஸ்வ

மாசி மக தீர்த்தவாரியில் தந்தைக்குதிதி கொடுத்த அருணாசலேஸ்வ

மாசி மக தீர்த்தவாரியில் தந்தைக்குதிதி கொடுத்த அருணாசலேஸ்வ


ADDED : மார் 13, 2025 01:49 AM

Google News

ADDED : மார் 13, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாசி மக தீர்த்தவாரியில் தந்தைக்குதிதி கொடுத்த அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், மாசி மக தீர்த்தவாரியில், தந்தைக்கு, அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது.

திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவிற்கு, குழந்தை இல்லாமல், அருணாசலேஸ்வரரிடம் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தார். அப்போது, அருணாசலேஸ்வரரே அவருக்கு மகனாக பிறந்ததாக, தல புராணங்கள் கூறுகிறது. இதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும், மாசி மகத்தன்று வள்ளாள மஹாராஜாவிற்கு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது.

இதையொட்டி நேற்று காலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து மேள தாளங்களுடன் புறப்பட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்திலுள்ள கவுதம துரிஞ்சல் நதிக்கரைக்கு சென்றடைந்தார். அங்கு சூல வடிவிலான அருணாசலேஸ்வரர், துரிஞ்சல் நதியில் மூழ்கி திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது.

பின்னர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, சம்மந்தனுார் கிராம மக்கள், அருணாசலேஸ்வரருக்கு சம்மந்தம் கட்டும் நிகழ்வு நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us