sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

3 எலுமிச்சை, 3 வெள்ளி காசு ரூ.77 ஆயிரத்துக்கு ஏலம்

/

3 எலுமிச்சை, 3 வெள்ளி காசு ரூ.77 ஆயிரத்துக்கு ஏலம்

3 எலுமிச்சை, 3 வெள்ளி காசு ரூ.77 ஆயிரத்துக்கு ஏலம்

3 எலுமிச்சை, 3 வெள்ளி காசு ரூ.77 ஆயிரத்துக்கு ஏலம்


ADDED : ஜூன் 22, 2024 02:30 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலசப்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் அர்னேசா அம்மன் கோவில் உள்ளது. இங்கு, 2 ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த, 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மாரியம்மன், அர்னேசா அம்மன், முத்தாலம்மன் ஆகிய பூங்கரகம் வீதி உலா நடந்தது.

ஏராளமான பக்தர்கள் வழிபட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு, காப்பு கலைதல் நிகழ்ச்சி நடந்தது.

இதில், 3 பூங்கரகத்தில் வைத்திருந்த, 3 எலுமிச்சை பழங்கள், 3 வெள்ளி காசுகள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது.

இவற்றை வீட்டில் வைத்து வழிபட்டால் தொழில் சிறக்கும், குடும்பம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளதால், அவற்றை, 77 ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.






      Dinamalar
      Follow us