sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

உயர்நீதிமன்ற வக்கீலை தாக்கிய 4 போலீசார் பணியிட மாற்றம்

/

உயர்நீதிமன்ற வக்கீலை தாக்கிய 4 போலீசார் பணியிட மாற்றம்

உயர்நீதிமன்ற வக்கீலை தாக்கிய 4 போலீசார் பணியிட மாற்றம்

உயர்நீதிமன்ற வக்கீலை தாக்கிய 4 போலீசார் பணியிட மாற்றம்


ADDED : மே 17, 2024 12:55 AM

Google News

ADDED : மே 17, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவாசி:வந்தவாசி அருகே, வக்கீலை தாக்கிய, 4 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சேதாரகுப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 25; சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக உள்ளார். கடந்த, 12 ல் வந்தவாசி தெற்கு போலீஸ் எஸ்.ஐ., ராமு மற்றும் போலீசார், வந்தவாசி தேரடியில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக, செம்பூரை சேர்ந்த மணிகண்டன், 21, என்பவர், 3 பேருடன் பைக்கில் சென்றார். அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அங்கு சென்ற வக்கீல் பாலமுருகன், மணிகண்டனுக்கு ஆதரவாக எஸ்.ஐ., ராமுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆபாசமாக பேசி, போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்தார். வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து, வக்கீல் பாலமுருகனை கடந்த, 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர். அப்போது அவரை போலீசார் தாக்கினர். இது குறித்த வீடியோ வைரலானது.

இதையடுத்து, வந்தவாசி தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும், எஸ்.ஐ., ராமு, மற்றும் போலீஸ்காரர் எல்லப்பன், ராமதாஸ், செந்தில்குமார், ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us