sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

ரூ.10,000 லஞ்சம் பெற்ற பெண் தாசில்தார் சிக்கினார்

/

ரூ.10,000 லஞ்சம் பெற்ற பெண் தாசில்தார் சிக்கினார்

ரூ.10,000 லஞ்சம் பெற்ற பெண் தாசில்தார் சிக்கினார்

ரூ.10,000 லஞ்சம் பெற்ற பெண் தாசில்தார் சிக்கினார்


ADDED : ஜூன் 16, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 50; அரசு பணி கான்ட்ராக்டர். இவர், கண்ணமங்கலத்தில், அரசு பணிக்கு 20 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளார். அதற்கு சொத்து மதிப்பு சான்றளிக்க வேண்டும்.

இதற்காக, ஆரணி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். சீனிவாசன் கடந்த, 13ல் சென்று கேட்டபோது, தாசில்தார் மஞ்சுளா, சான்று வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். தர விரும்பாத சீனிவாசன், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய, 10,000 ரூபாயை நேற்று முன்தினம் இரவு மஞ்சுளாவிடம், சீனிவாசன் கொடுத்தார். அவர், இரவு வாட்ச்மேன் பாபுவிடம் கொடுக்குமாறு கூறினார். பாபு பணத்தை பெற்று, தாசில்தார் மஞ்சுளாவிடம் வழங்கினார். லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். அலுவலகத்தில் சோதனையிட்டு, ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us