sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

நெல் உலர்த்த வைத்த கல் தொழிலாளி உயிரை பறித்தது

/

நெல் உலர்த்த வைத்த கல் தொழிலாளி உயிரை பறித்தது

நெல் உலர்த்த வைத்த கல் தொழிலாளி உயிரை பறித்தது

நெல் உலர்த்த வைத்த கல் தொழிலாளி உயிரை பறித்தது


ADDED : மே 10, 2024 11:13 PM

Google News

ADDED : மே 10, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதுரை, 46; கட்டட தொழிலாளி. இவர், மூன்று நாட்களுக்கு முன், 'பஜாஜ்' பைக்கில் கட்டட பணிக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பாச்சல் அருகே வந்தபோது, திருவண்ணாமலை - பெங்களூரு நெடுஞ்சாலையில், சிலர் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர வைத்திருந்தனர். அந்த நெல் மீது வாகனங்கள் ஏறாமல் இருக்க, கருங்கற்களை சாலையில் அடுக்கி வைத்திருந்தனர்.

அந்த கல்லின் மீது கங்காதுரை பைக் ஏறியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர், பரிதாபமாக பலியானார். பாச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சாலையில் கருங்கல் வைத்து நெல்லை உலர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று கங்காதுரை உறவினர்கள் கண்ணக்குருக்கை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி மறியலை கைவிட செய்தனர்.






      Dinamalar
      Follow us