sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை

/

அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை

அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை

அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி பூஜை


ADDED : மே 28, 2024 08:49 PM

Google News

ADDED : மே 28, 2024 08:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது.

அக்னி நட்சத்திரம் கடந்த, 4ல், தொடங்கி நேற்று வரை இருந்தது. இக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருக்கும். இந்த நாட்களில், இறைவனை குளிர்விக்கவும், எல்லா ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை பெய்ய வேண்டியும், தோஷ நிவர்த்திக்காக சிவன் கோவில்களில், உச்சிகால அபிஷேக பூஜை நடக்கும் நேரமான, 11:30 மணிக்கு தொடங்கி, சாயரட்சை பூஜை நடக்கும் நேரமான, மாலை 6:00 மணி வரை தாரா அபிஷேகம் நடக்கும். அதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலில், பன்னீர், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை தாரா பாத்திரத்தில் ஊற்றி, அதை மூலவர் லிங்கம் மீது சொட்டு சொட்டாக விழும்படி, தாரா அபிஷேகம் நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று, 28 ல் அக்னி நட்சத்திரம் நிறைவுறுவதையொட்டி கடந்த, 26 ல் மாலை அக்னி தோஷ நிவர்த்தி, 1,008 கலசாபிஷேக, முதல்கால பூஜை தொடங்கியது. இதில் கணபதி பூஜை உள்ளிட்ட பூஜை நடந்தது. தொடர்ந்து, 2, 3 மற்றும் 4ம் கால பூஜை நடத்தப்பட்டு, நேற்று காலை, 11:00 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்ட, 1,008 கலச புனித நீரை கொண்டு, அருணாசலேஸ்வரருக்கு அக்னி தோஷ நிவர்த்தி கலசபாபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us