/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கார் - பைக் மோதி விபத்து தந்தை, மகன் பரிதாப பலி
/
கார் - பைக் மோதி விபத்து தந்தை, மகன் பரிதாப பலி
ADDED : ஜூலை 23, 2024 09:05 PM
போளூர்:திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் குப்பன், 65. இவரது மகன் பாலசுப்பிரமணி, 45, பா.ம.க., மாநில இளைஞரணி அமைப்பாளர். இவரும், நேற்று முன்தினம், சொந்த கிராமமான கொரல்பாக்கத்திற்கு, 'ஹோண்டா' பைக்கில் சென்று விட்டு, மீண்டும் அன்று மாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை பாலசுப்பிரமணி ஓட்டினார்.
போளூர் பைபாஸ் சாலையில், திருவண்ணாமலையிலிருந்து ஆந்திரா நோக்கி சென்ற, 'பார்ச்சுனர்' காரை முந்த முயன்றனர். அப்போது, பாலசுப்பிரமணி நிலை தடுமாறியதில், கார் மீது பைக் மோதியது. இதில், இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாயினர். விபத்து குறித்து, போளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.