sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பேரூராட்சிக்கு சொந்தமான சாலை பட்டா போட்டு மோசடியாக விற்பனை

/

பேரூராட்சிக்கு சொந்தமான சாலை பட்டா போட்டு மோசடியாக விற்பனை

பேரூராட்சிக்கு சொந்தமான சாலை பட்டா போட்டு மோசடியாக விற்பனை

பேரூராட்சிக்கு சொந்தமான சாலை பட்டா போட்டு மோசடியாக விற்பனை


ADDED : ஜூன் 11, 2024 06:13 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 06:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துப்பட்டு:சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான சாலையை, தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து விற்பனை செய்ததால், பேரூராட்சி அலுவலர் அதிர்ச்சியடைந்து, அதை ரத்து செய்யக்கோரி, தாசில்தாருக்கு மனு அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியிலுள்ள, 12 வார்டுகளில், 25,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், 12வது வார்டில், அண்ணா தெரு, ஜாகீர் உசேன் தெரு, வ.உ.சி., தெரு, பாத்திமா தெரு, ஆகியவற்றை இணைக்கும், 7 அடி அகல குறுக்கு தெரு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இதை ஒட்டியுள்ள கடை தெருவிலிருந்து, ஜாகீர் உசேன் தெருவை இணைக்கும், 7 அடி அகலம், 85 அடி நீளம் கொண்ட குறுக்கு தெரு, முட்புதருடன் காணப்படுகிறது.

இத்தெருவில் சாலை வசதி, மின்வசதி ஏற்படுத்த, பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான அதிகாரிகள் சில நாட்களுக்கு அளவீடு செய்ய சென்றனர். அப்போது அந்த இடம், 2018ல் தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து, 2023ல் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், பேரூராட்சி அலுவலர் சம்பத்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர், அந்த குறுக்கு தெரு, தனி நபர் பெயரில் பட்டா செய்துள்ளதாகவும், அதை ரத்து செய்து தருமாறும், சேத்துப்பட்டு தாசில்தார் சசிகலாவிற்கு மே, 15ல் கடிதம் அனுப்பினார். ஆனால், தாசில்தார் அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். பேரூராட்சிக்கு சொந்தமான இடம், தனிநபருக்கு பட்டா போடப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us