sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பர்வத மலையில் இடி தாக்கி சேதமடைந்த கோபுர சிற்பம்

/

பர்வத மலையில் இடி தாக்கி சேதமடைந்த கோபுர சிற்பம்

பர்வத மலையில் இடி தாக்கி சேதமடைந்த கோபுர சிற்பம்

பர்வத மலையில் இடி தாக்கி சேதமடைந்த கோபுர சிற்பம்


ADDED : மே 09, 2024 11:24 PM

Google News

ADDED : மே 09, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலத்தில், 4,560 அடி உயர பர்வதமலையில், பிரம்மராம்பிகை அம்மன் உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ காலங்களில், பக்தர்கள் தங்கி பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

கோவில் வளாகத்தில் மூன்று இடி தாங்கிகள் இருந்தாலும், அவற்றில் இரண்டு பழுதடைந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழையில், கோபுரத்திலுள்ள காவல் தெய்வ சிலையை இடி தாக்கி சேதமானது.

கோவில் சுற்றுச்சுவரில் விரிசல் மற்றும் சோலார் விளக்கு சேதமடைந்தது. சேதமான சிலை உள்ளிட்டவற்றை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த, 2010ல் இக்கோவிலில் இடி தாக்கியதில், நான்கு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us