ADDED : ஆக 03, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:திருவண்ணாமலையை அடுத்த கோசாலை கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜி, 40.
இவரது மனைவி திலகவதி, 35. இவர்களின் மகள் பிரபா, 10. மகன் மோனிஷ், 8. அனைவரும் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், வெறையூர் செல்ல திருவண்ணாமலை - திருக்கோவிலுார் சாலையில், தென்மாத்துார் அருகே 'ஹோண்டா' பைக்கில் சென்றனர். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியதில், நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் திலகவதி, பிரபா சம்பவ இடத்தில் பலியாகினர். இதுகுறித்து வெறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.