sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

திருவண்ணாமலையில் 2வது நாளாக பவுர்ணமி கிரிவலம்

/

திருவண்ணாமலையில் 2வது நாளாக பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் 2வது நாளாக பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் 2வது நாளாக பவுர்ணமி கிரிவலம்


ADDED : மே 24, 2024 05:47 AM

Google News

ADDED : மே 24, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், பவுர்ணமியையொட்டி நேற்று, 2வது நாளாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக பாவித்து வழிபடுகின்றனர். பவுர்ணமி தோறும், 14 கி.மீ., அண்ணாமலையார் மலையை வலம் வந்து, கோவிலிற்கு சென்று, அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மனை வழிபட்டு வருகின்றனர்.

இதில், வைகாசி மாத பவுர்ணமி திதி, நேற்று முன்தினம் இரவு, 7:14 முதல், நேற்றிரவு, 7:48 மணி வரை இருந்தது.

அந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இதில், நேற்று முன்தினம் இரவு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற நிலையில், நேற்றிரவு வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மேலும், கோவிலில், 7 மணி நேரம் காத்திருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us