sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மனைபிரிவுக்கு ஒப்புதல் தர ரூ.1.80 லட்சம் லஞ்சம்; டி.வி. நல்லுார் பேரூராட்சி செயல் அலுவலர் கைது

/

மனைபிரிவுக்கு ஒப்புதல் தர ரூ.1.80 லட்சம் லஞ்சம்; டி.வி. நல்லுார் பேரூராட்சி செயல் அலுவலர் கைது

மனைபிரிவுக்கு ஒப்புதல் தர ரூ.1.80 லட்சம் லஞ்சம்; டி.வி. நல்லுார் பேரூராட்சி செயல் அலுவலர் கைது

மனைபிரிவுக்கு ஒப்புதல் தர ரூ.1.80 லட்சம் லஞ்சம்; டி.வி. நல்லுார் பேரூராட்சி செயல் அலுவலர் கைது

1


ADDED : ஆக 22, 2024 02:04 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:04 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை பிரிவுக்கு ஒப்புதல் வழங்க, ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சேட்டு, 45; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தற்போது திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் புதிய மனைப்பிரிவு அமைத்து விற்பனை செய்து வருகிறார்.

மனைப்பிரிவில் ஒரு சில மனைப்பிரிவுகளுக்கு பேரூராட்சி ஒப்புதல் கேட்டு, திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார்.

பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வரும் புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் முருகன், 51; என்பவர், சேட்டுவிடம் ரூ. 3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். தர மறுத்தவரிடம் முருகன் பேரம் பேசியதில், இறுதியாக 1.80 லட்சம் ரூபாய் தருவதாக சேட்டு ஒப்புக்கொண்டார்.

பின்னர் இது குறித்து விழுப்புரம், லஞ்சம் ஒழிப்பு அலுவலகத்தில் சேட்டு புகார் அளித்தார்.

அதன்பேரில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., (பொறுப்பு) வேல்முருகன், விழுப்புரம் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூ.1.80 லட்சம் பணத்தை, நேற்று தனது அலுவலகத்தில் இருந்த செயல் அலுவலர் முருகனிடம் சேட்டு கொடுத்தார்.

அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், செயல் அலுவலர் முருகனை லஞ்சப் பணத்துடன் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us