/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
சனி பிரதோஷம் தி.மலை கோயிலில் வழிபாடு
/
சனி பிரதோஷம் தி.மலை கோயிலில் வழிபாடு
ADDED : ஆக 18, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நேற்று, ஆவணி மாத வளர்பிறை சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், சந்தனம், இளநீர், உள்ளிட்ட பல வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. பிரதோஷ பூஜையை காண கோயிலில் கூடிய ஏராளமான பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி கோஷமிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.