sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த மாணவியால் அதிர்ச்சி

/

கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த மாணவியால் அதிர்ச்சி

கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த மாணவியால் அதிர்ச்சி

கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த மாணவியால் அதிர்ச்சி


ADDED : ஜூலை 17, 2024 08:54 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 08:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அய்யாவாடி கிராமத்தை சேர்ந்த ஒருவரின் மகன், 22 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கும், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், மே, 31ல் காஞ்சிபுரத்திலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவியின் கழுத்தில் தாலி இருந்ததை கண்டு, சக தோழிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து, மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, அனக்காவூர் வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் காவேரி, விசாரணை செய்தார். அதில், அந்த மாணவி திருமணம் செய்தது உண்மை என தெரிந்தது. இது குறித்து, வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, மாணவியை மீட்டு, திருவண்ணாமலையிலுள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவான அவரின் கணவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us