sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மகன் இறப்பு; அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு

/

மகன் இறப்பு; அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு

மகன் இறப்பு; அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு

மகன் இறப்பு; அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு


ADDED : மார் 03, 2025 06:50 AM

Google News

ADDED : மார் 03, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம் : செங்கம் அருகே மகன் இறந்த செய்தி கேட்ட தாய், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காரப்பட்டு கொல்லக்கொட்டாயைச் சேர்ந்தவர் சாந்தி, 60. இவரது மகன் சின்னமணி, 34; கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனா, 30; வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

இரு நாட்களுக்கு முன் வேலைக்கு சென்ற சின்னமணி வீடு திரும்பவில்லை. புதுப்பாளையம் போலீசில் சாந்தி புகார் செய்தார். போலீசார் தேடி வந்த நிலையில், செங்கம் அடுத்த நந்திமங்கலம் - பனை ஓலைப்பாடி சாலையில், சிறு பாலத்தின் அருகே சின்னமணி சடலம் கிடந்தது.

இதுகுறித்து, சாந்திக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்ட அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு, சரிந்து விழுந்த சாந்தி பரிதாபமாக இறந்தார். புதுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us